Tuesday, May 3, 2011

அக்பர் (1556 - 1605 / 963 - 1014)


இந்தியாவில் அரசாண்ட சிறப்புமிக்க அரசர்களுள் அக்பரும் ஒருவர். அளப்பரிய அல்லல்களுக்கிடையில் பிறந்து வளர்ந்து, படிக்காத மேதையாகி, வீரனாகவும் விவேகியாகவும் வாழ்ந்து பேரரசு ஒன்றை அமைத்து எம்மதமும் சம்மதம் என்ற சமயப் பொறையுடன் செங்கோலோச்சிய செம்மல் இவர்.
இந்தியாவில்லுள்ள இரு பெரும் மதங்களான இந்து மதத்தையும் இஸ்லாமிய மதத்தையும் இணைக்கும் ஒரு பாலமாக அமைந்து, காலமெல்லாம் இருந்துவரும் மதப் பூசல்களுக்கு முடிவ்வு காண முயன்ற விந்தை மனிதர் இவர். களத்தில் தோல்வியே கண்டிறாதவர். அவரது சீரிய ஆட்சி முறையின் சுவடுகளை முகலாயருக்குப் பின் வந்த ஆங்கிலேயரின் ஆட்சி முறையில் காணலாம். அக்பரின் ஆட்சியில் மத பேத்மின்றிப் பதவிகள் வழங்கப்பட்டன. எல்லா மதத்தினரையும் பின்னிப் பிணைத்து வலிமைமிக்க பேரரசொன்றை நிறுவிய பெருமை அக்பரையே சாரும்.  அக்பர் நிலவரி நிர்வாகத்திலும் சமூகத்திலும் செய்த சீர்திருத்தங்கள் அவருக்கு வரலாற்றில் நிலையான ஒரு இடத்தைப் பெற்றுத் தந்தன. இவரது அரவணைப்பில் கலைகள் வளர்ந்தன; கற்றோர் களிப்புற்றனர். முஸ்லிம்கள் இந்தியாவில் காலூன்றிய நாள் முதல் அவர்களது ஆட்சி முடிவடையும் வரை அக்பரைப் போன்ற ஒரு மாமன்னர் தோன்றவில்லை எனலாம்.

அக்பரின் தந்தை முகலாயப் பேரரசர் ஹுமாயூன் ஆவார். ஹுமாயூன் ஆட்சியை இழந்து சிந்துவில் அலைந்து கொண்டிருந்தபோது அப்பிரதேசத்தில் இருந்த அமர்கோட் எனும் சிற்றூரில் கி.பி.1542ல் அக்பர் பிறந்தார். இளமையில் புத்தகப் படிப்பு அக்பருக்கு வேம்பாய்க் கசந்தது. பாரசீக அறிஞர்  அப்துல் ல்தீப் என்பவர் அவருக்கு முழு நேர ஆசிரியராக நியமிக்கப்பட்டபோதும் இவர் படிப்பில் அவ்வளவாக அக்கறை காட்டவில்லை. மாறாக குதிரைச் சவாரியிலும் அம்பெய்தல், வேட்டையாடுதல் முதலானவற்றிலும் அலாதிப் பிரியம் காட்டினார். இயல்பிலேயே இவர் சிறந்த அறிவுக்கூர்மையையும் நினைவாற்றலையும் பெற்றிருந்தார்.

தந்தை ஹுமாயூனின் மரணத்தயடுத்து அப்போது 13 வயது மட்டுமே நிரம்பியிருந்த அக்பர் ஆக்ராவில் வைத்து பாதுஷாவாக 1556ல் முடிசூட்டப்பட்டார். இவர் சிறுவராக இருந்ததால் ஆரம்பத்தில் ஆட்சிப் பொறுப்பு முழுவதும் அக்பரின் உதவியாளராக இருந்த பைராம்கானிடம் ஒப்படைக்கப்பட்டது. வயது 18 ஆனதும் ஆட்சிப் பொறுப்பைக் கையிலெடுக்க விரும்பியதால் பைராம்கானுக்கும் அக்பருக்கும் இடையில் முறுகல் நிலை தோன்றியது. தனது ஆப்கானிய உதவியாளர் ஒருவரின் துணை கொண்டு  பைராம்கானைத் தீர்த்துக் கட்டி, ஆதிப் பொறுப்பு முழுவதையும் தனதாக்கிக் கொண்டார்.

தனது அரசாங்கத்தை ஸ்திரப்படுத்த விரும்பிய அக்பர் இராஜ புத்திரர்களோடு மென்மையாக நடந்து கொண்டார். இந்துக்களைப் பகைத்துக் கொள்ளாமல் அவர்களை அரவணைக்கவும் செய்தார்.

ஆட்சியைப் பலப்படுத்திய அக்பர் பின்னர் தனது சாம்ராஜ்யத்தின் அல்லையை விஸ்தரிக்க விரும்பினார். முதற்கட்டமாக குவாலியர் கோட்டை மீது படை நடாத்திச் சென்று அதனைத் தன்வசப்படுத்திக் கொண்டார். தொடர்ந்து மாளவம் (1561), கோண்டுவானா (1564), சிதூர் (1567), குஜ்ராத் (1572), கிழக்கு வங்கம் (1574), மேவார் (1576), காஷ்மீர் (1586) போன்ற பல பிரதேசங்கள் கைக்கப்பற்றப்பட்டு அக்பரின் ஆட்சியின் கிழ் கொண்டுவரப்பட்டன.இதன் பின்னரும் தக்காணம், அஹ்மத் நகர், காந்தேஷ் முதலாம் பகுதிகள் அக்பரால் கைப்பற்றப்பட்டன.

ஆட்சியைப் நிலைப்பலப்படுத்தும் தனது திடடத்தின் அடுத்த கட்டமாக இராஜபுத்திரர்களுக்கும் தனக்கும் இடையிலான உறவைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடலானார். இந்தியாவி முகலாயர்களின் ஆட்சி வேரூன்ற வேண்டுமானால் இந்து வீரர்களான இராஜபுத்திரர்களின் உறவும் ஒத்துழைப்பும் அவசியம் என்பதை அக்பர் நன்கு உணர்ந்திருந்தார். எனவே அக்பர் இராஜ புத்திரர்களோடு மென்மையாக நடந்து கொண்டார். இந்துக்களைப் பகைத்துக் கொள்ளாமல் அவர்களை அரவணைக்கவும் செய்தார்.  1562ல் தனதாட்சிக்குப் பணிந்த ஜெய்ப்பூர் அரசர் பீஹர்மாலின் புத்திரியைத் தனது மனைவியாக்கிக் கொண்டார். இவரின் புத்திரர்தான் இள்வரசர் ஸலீம்.பின்னரும் தனக்குப் பணிந்த ஆட்சியாளர்களின் புத்திரிகளை மணந்து கொண்டதோடு மட்டுமன்றித் தனது உறவினர்களையும்  இந்துப் பெண்களை மணக்கச் செய்தார்.  இராஜபுத்திரர்கள் பலரை அக்பர் தனது நிர்வாகத்தில் உயர் பதவிகளிலும் அமர்த்திக் கொண்டார். இத்தகைய திருமணங்களால்  ஆட்சிக்கு நன்மை பயப்பதாகவே அமைந்தன.

மன்னர் அக்பரது இந்த இராஜ புத்திரக் கொள்கை இந்து முஸ்லிம் பண்பாட்டு ஒருமுகப்பாட்டுக்கு வழிகோலியது. கருத்துப் பரிமாற்றமும் கலாசாரப் பரிமாற்றமும் தடையின்றி இடம்பெற்றன. இந்துக்கள் உருது, பாரசீகம் போன்ற மொழிகளைக் கற்றனர். முஸ்லிம்களும் சமஸ்கிருதம்,  இந்தி ஆகிய மொழிகளைக் கற்றனர். இந்நடைமுறை நாளடைவில் இந்து மதக் கொள்கைகளின்பால் அக்பரை ஈர்க்கச் செய்தது.தனது இந்துமத மனைவியருக்கு அவர்களது சம்மயச் சடங்குகளையும் விழாக்களையும் மேற்கொள்ள இடமளித்ததோடு நில்லாது தானும் அம்மதத்தின் ஆசாரங்கள் பலவற்றையும் மேற்கொண்டார். நாள்தோறும் தனது ஜன்னல்லருகே நின்று பொது மக்களுக்கு தரிசனமளித்தார். தீபாவளி, சிவராத்திரி போன்ற பண்டிகைகளைக் கொண்டாடினார். நெற்றியில் திலகமிட்டுக்கொண்டார். இந்துக்களைப் போலவே தலையில் குடுமி வைத்து தலைப்பாகை கட்டிக்கொண்ட அக்பர், இந்து மத ஆசாரப்படி காலில் வீழ்ந்து வணங்கும் வழகத்திற்கும் தனது சபையில் அக்பர் அனுமதி வழங்கியிருந்தார்.

அக்பர் புகுத்திய புதிய சமயக் கொள்கையே "தீனே இலாஹீ" இறை ஒருமைப்பாடு என்பதாகும். பல ஆண்டுகளாக  இறைவனைபற்றி அழமான ஆய்வுகளை மேற்கொண்ட அவர் இதர சமயங்களின் குறை நிறைகளையும் அலசி ஆராய்ந்தறிந்ததன் விளைவாகப் பிறந்ததே இந்தப் புதிய மார்க்கமாகும். நாடு முழுவதற்குமான ஒரு பொதுச் சமயம் தேவை எனும் கருத்தியலை மையப்படுத்தியதாகவே   அக்பரின் இக்கொள்கை அமைந்தது.

அக்பர் தன்னது பாட்டனைப்போலவே நெஞ்சுரம்மிக்க ஒரு கடமை வீரராகத் திகழ்ந்தார். இளமை முதல் போர்கள்லும் வேட்டையாடுவதிலும் ஈடுபாடு காட்டியதால் அவர் மிகச் சிறந்த உடற்பலத்தைப் பெற்றிருந்தார். வீரத்தில் மாவீரன் அலக்ஸாண்டருக்கு ஒப்பிடப்பட்டார். கடினமான ஒரு பணியைக்கூட விருப்போடு ஏற்றுக்கொள்வது அவரது இயல்பாக இருந்தது.ஒரு சமயம் அஜ்மீருக்கும் ஆக்ராவுக்கும் இடையிலான 240 மைல் தூரத்தை சரியாக ஒரு நாளில் சவாரி மூலம் சென்று முடித்தார்.

அக்பர் சிறு வயது முதலே குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். சிலபோது அளவு கடந்து குடித்ததால் தன்னிலை கெட்டுத் தடுமாறிய சந்தர்ப்பங்களும் உண்டு.வாலிப வயதில் காம வெறி கொண்டலைந்த அக்பர் அழகிய பெண்களை அடைவதில் அதீத ஆவல் கொண்டிருந்தார்.  பிற்காலத்தில் தன் தவறுகளை உணர்ந்து திருந்தி வாழ்ந்தார். கோபமுற்ற சந்தர்ப்பங்களில் தீயெனக் கொதித்த அக்பர் கோபம் தணிந்த வேளைகளில் குளிரும் நிலவெனக் காட்சியளித்தார்.

படியா மேதையான அக்பருக்கு கேள்வி ஞானமே அதிகமிருந்தது. அவரிடம் காணப்பட்ட இந்த இயல்பான ஞானம்தான் அவரை மெய்ப்பொருள் காணவும்  வைத்தது.

எல்லா மன்னர்களியும் போலவே இவரும் இந்தியக் கட்டடக் கலை வளர்ச்சியில்  பெரும் பங்களிப்புச் செய்தார். தனது மகன் ஸ்லீமின் பிறப்பையொட்டி ஆக்ராவில் 7 மைல் சுற்றளவு கொண்ட , மூன்று பக்கங்கள் சுவரால் சூழப்பட்ட ஒரு சிற் நகரை நிருமணித்தார். ராணி ஜோத்பாய் மாளிகை, பீர்பால் இல்லம், தீவானி காஸ், செங்கோட்டை, லாகூர் கோட்டை, அலகாபாத் கோட்டை முதலியன அக்பரின் கட்டடக் கலை ஆர்வத்துக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

சுமார் 50 வருடகால ஆட்சியின் பின்னர் மன்னர் அக்பர் தனது 63ம் வயதில் காலமானார். இவரது அடக்கவிடம் ஆக்ராவிலுள்ள சிக்கந்தரா எனுமிடத்தில் அமையப் பெற்றுள்ளது.

ஜஹாங்கீர் (1605 - 1627 / 1014 - 1036)

அக்பர் இறக்கும்போது தந்து புத்திரர் ஸலீம்தான் தனக்குப் பின்னர் ஆட்சியாளராக வரவேண்டுமென விரும்பினார். இதன்படி 1605ல் (ஒக்டோபர் 21)நூருத்தீன் முஹம்மத் ஜஹாங்கீர் பாதுஷா காழி எனும் பட்டப்பெயரோடு ஆட்சியில் அமர்ந்தார். ஜஹாங்கீர் என்ற பாரசீகப் பதத்திற்கு உலகைக் கைப்பற்றி ஆள்பவன் என்பது பொருள்.

38வது வயதில் அரியணையில் அமர்ந்த ஜஹாங்கீர்


















No comments:

Post a Comment